states

img

நெல்லை கல்குவாரி விபத்து: தலைமறைவாக இருந்த உரிமையாளர், மகன் கைது  

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14 ஆம் தேதி எதிர்பாராதவிதமாக ராட்சத பாறை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 2 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை நேற்று காலை முதல் தீயணைப்புத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மீட்கும் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.    

இதனிடையே கல்குவாரி விபத்து தொடர்பாக நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  

இந்நிலையில் தலைமறைவாக இருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் கர்நாடக மாநிலம் மங்களூரிவில் வைத்து தனிப்படை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.