கர்நாடகாவின் குடகு பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் இன்று காலை 7.45 மணிக்கு லேசான நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்து உள்ளது.. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
அதே போல அங்குள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலும் நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இங்கு 2.3 ரிக்டர் அளவில் நில அதிவானது ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டு உள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்