states

img

முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கர்நாடக அரசு அனுமதி

கர்நாடக அரசுப் பள்ளி - கல்லூரி களில், முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவதற்கு, முந்தைய பாஜக ஆட்சி யில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. முஸ்லிம் மாணவியரின் போராட்டத்தை கொச்  சைப்படுத்தும் வகையில், ஆர்எஸ்எஸ்  மாணவர் பிரிவான ஏபிவிபி-யைச் சேர்ந்த சிலர், ஏட்டிக்குப் போட்டியாக காவித் துண்டு அணிந்து, கலவரத்தில் இறங்கினர். பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவி யர் உச்சநீதிமன்றம் வரை சென்று  தங்களின் உரிமைக்கான போராட் டத்தை நடத்தினர். இதனிடையே, கர்நாடகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், முதல்வர் சித்தராமையா, கல்வித்துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிந்து வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடக தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் தேர்வறையில் பெண்கள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.