states

img

பாலியல் வழக்கு: கர்நாடக பாஜக நிர்வாகி கைது!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் பாஜக நிர்வாகியான தேவராஜே, கடந்த 10 மாதங்களாக பெண் ஒருவரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தார் என பெண் ஒருவர் ஹோலெநரசிபுரா நகர காவல்துறையில் புகார் அளித்தார். இந்த நிலையில், பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி, பிரஜ்வல் மீதான ஏராளமான ஆபாச வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவருக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கக் கூடாது எனவும் பாஜக மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு தேவராஜே கவுடா கடிதம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.