states

img

கர்நாடகாவில் ஜீப் சாலையோர மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில்  9 பேர் பலி  

கர்நாடகாவில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கர்நாடக மாநிலம் தார்வார் அருகே நிகதி பகுதியை சேர்ந்தவர் நீலவ்வா(60). இவரது மகளின் திருமணத்திற்காக இன்று காலை அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்காக நிகதி பகுதியை சேர்ந்த 21 பேர் ஒரு ஜீப்பில் அங்கு சென்று கொண்டிருந்தனர்.  

அப்போது திடீரென ஜீப் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.  

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தார்வார் புறநகர் போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;