states

img

ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனாவா? பெங்களூரு மாநகராட்சியின் புதிய முடிவு

ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருந்தால் அந்த அடுக்கு மாடி குடியிருப்பு முழுக்க கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது. 
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் கர்நாடகத்தில் பெங்களூரு மாநகராட்சியில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது. 
அதன்படி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்த குடியிருப்பு பகுதி முழுக்க சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.