மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில் கடந்த சில வாரங்களாக நாட்டின் முக் கிய நகரங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரு கிறது. கடந்த சில வாரங்க ளுக்கு முன்பு நாட்டின் தலை நகர் தில்லி, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், மகா ராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட இடங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதனை ஒன்றிய அரசு புரளி என கண்டுகொள் ளாமல் இருந்த நிலையில், மார்ச் 1 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கபே உண வகத்தில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடித்ததில் உணவக பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்ப வம் தொடர்பாக என்ஐஏ விசாரணை மேற் கொண்டு வருகிறது.
மீண்டும் மிரட்டல்
இந்நிலையில், கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டுத் தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல கர்நாடக முதல்வர், உள்துறை அமைச் ர், காவல்துறை தலைவருக்கு மின்னஞ் சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் கர்நாடகாவின் முக்கிய நகரங்களில் சோதனை மேற்கொண்ட போலீசார் பாது காப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதவன்முறையை தூண்டும் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர்
குண்டுவெடிப்பு சம்பவங்க ளால் கர்நாடக மாநி லம் முழுவதும் மட் டுமின்றி தென் மாநி லங்கள் பதற்றத்தில் உள்ள நிலையில், ஒன் றிய பாஜக அமைச் சர் அனுராக் தாக் குர் அரசியல் ஆதா யத்திற்காக மத வன்முறையை தூண் டும் வகையில் கருத்தை தெரிவித்து மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் கர்நாடகாவில் நிறைவு பெற்ற மாநிலங்களவை தேர்தலில் மொத்தமுள்ள 4 இடங்களில் 3 இடங் களை காங்கிரஸ் கட்சியும், ஒரு இடத்தை பாஜகவும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி யை வீழ்த்த போட்டி வேட்பாளரை இறக் கிய பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வி கண்டது.
காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் பாஜக எம்எல்ஏக்கள் வழக் கம் போல இழிவான அரசியலில் இறங்கி னர். அதாவது மாநிலங்களவை தேர்த லில் வெற்றி பெற்ற காங்கிரஸின் நசீர் ஹுசைன் (முஸ்லிம்) கர்நாடக சட்டமன் றத்தில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” எனக் கூறியதாகவும், இதுதொடர்பாக தங்களி டம் ஆடியோ இருப்பதாகவும் பாஜக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மறுப்பு தெரி வித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் ஆதரவு கோஷமிடுபவர்களை காங்கி ரஸே பாதுகாப்பதாகக் கூறி இந்து - முஸ்லிம் மக்களிடையே மதவன்முறை யை தூண்டும் முனைப்பில் கருத்து தெரிவித்துள்ளார் ஒன்றிய பாஜக அமைச்சர் அனுராக் தாக்குர். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “நசீர் ஹுசைன் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பாகிஸ்தா னுக்கு ஆதரவான முழக்கங்களை எழுப் பினார். ஆனாலும் அவர் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமலும் அம்மாநில காங்கிரஸ் அரசு நசீர் ஹுசைனை பாது காத்து வருகிறது” என விஷமம் செய் துள்ளார்.
ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கு ரின் கருத்தை மக்களவை தேர்தல் பிரச்சா ரமாக கையெடுத்துள்ள கர்நாடக பாஜக வினர் சமூகவலைத்தளங்களிலும், பொது இடங்களிலும் “காங்கிரஸ் பாகிஸ் தானை ஆதரிக்கிறது” என மத ரீதியாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.