கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் 7 கலைக்கப்பட்ட சிசுக்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நல்லா நதிக்கரையில் சிலர் நேற்று துணிகளை துவைக்க வந்துள்ளனர். அப்போது அங்கு கிடந்த கண்ணாடி பாட்டில்களை பார்த்துள்ளனர். அதில் 5 முதல் 7 மாதத்தில் கருகலைப்பு செய்யப்பட்ட சிசுக்களின் உடல்களை பாட்டிகளில் அடைத்து வீசி இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்த பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாட்டில்களை கைப்பற்றினர்.
இதையடுத்து மீட்கப்பட்ட 7 சிசுக்களின் உடல்களை முடல்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மகேஷ் கோனி தெரிவித்துள்ளார். மேலும், 7 சிசுக்களின் உடல்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜர்கிஹோலி கூறுகையில், இதுபோன்ற நிகழ்வுகள் பொதுச் சமூகத்திற்கு பெருத்த அவமானம் என தெரிவித்துள்ளார்.