states

img

கர்நாடகா: நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலி

கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடகாவின் கடலோரப் பகுதிகள் மற்றும் மல்நாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் மற்றும் சொத்துகள் சேதம் அடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் விவசாய வயல்களிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் புகுந்துள்ளது. மங்களூருவில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அம்மாநில வானிலை ஆய்வு மையம் பல்வேறு பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் சுற்றுலா பயணிகள் மற்றும் மீனவர்கள் கடற்கரை செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

;