states

img

29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் விடுதிக்கு சீல்  

கர்நாடகாவில் தனியார் நர்சிங் பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

கர்நாடகா - சிவமொக்கா நகரில் அமைந்துள்ள தனியார் நர்சிங் பள்ளியை சேர்ந்த 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த மாணவர்களில் பலருக்கு தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மேலும் அவர்களில் பலர் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. கொரோனா தொற்று உறுதியான 29 மாணவர்களையும் தனிமைப்படுத்தி கணகாணித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

;