ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் நேற்று காலமானார்.
ஒடிசா மாநிலத்தின் முதல் பழங்குடியின முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்த பிஸ்வால் கடந்த 8ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை அவர் காலமானார்.
அவருக்கு வயது 82. மறைந்த பிஸ்வால் இரண்டு முறை ஒடிசா முதல்வராகவும், ஒரு முறை துணை முதல்வராகவும் பதவி வகித்திருக்கிறார். மேலும் எம்பியாகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
ஹேமானந்த பிஸ்வால் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.