ஒடிசாவில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அனைத்து அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து ஒடிசா சட்டப்பேரவை சபாநாயகரிடம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா கடிதத்தை வழங்கினர். அதன் தொடர்ச்சியாக நாளை காலை 11:45 மணியளவில் ஒடிசா ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை மையமாக வைத்தே நவீன் பட்நாயக் புதிய அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.