states

img

உத்தரகாண்ட், கோவாவில் இன்று வாக்கு பதிவு

உத்தரகாண்ட் மற்றும் கோவா சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று 2ம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.
உத்தரபிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த ஜன.8ஆம் தேதி தேர்தல்அறிவிக்கப்பட்டது. இதில் உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. பஞ்சாப், கோவா, உத்தராகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்.14-ல்வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பஞ்சாப் தேர்தல் மட்டும் பிப்.20ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவாவில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தரகாண்டில் மொத்தம் 81 லட்சத்து 72 ஆயிரத்து 173 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 11 ஆயிரத்து 697 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல்
மேலும் உத்தரபிரதேசத்தில் 2ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளுக்கு 2ஆம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.