states

img

கோயிலில் அர்ச்சகர்களுடன் தகராறு... உ.பி. பாஜக எம்.பி. மீது  உத்தரகண்ட் போலீஸ் வழக்கு...

டேராடூன்:
கோயில் அர்ச்சகர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேசத் தைச் சேர்ந்த பாஜக எம்.பி.மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உத்தரகண்ட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உ.பி. மாநிலம் அவோன்லா தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் தர்மேந்திர காஷ்யப். இவர்,தனது ஆதரவாளர்கள் சிலருடன் ஜூலை 31-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ளஜகேஸ்வர் தாம் கோவிலுக்கு சென்றுள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாலை 6 மணிக்கே கோயில் மூடப்பட வேண்டும் என்ற நிலையில், தர்மேந்திர காஷ்யப்எம்.பி.யும், அவரது ஆதரவாளர்களும் கோவிலிலேயே இருந்துள்ளனர். இதனால் அவர்களை வெளியேறுமாறு அர்ச்சகர்கள் கூறியதாகவும், இதில், கோபமடைந்த தர்மேந்திர காஷ்யப்பும், அவரது ஆதரவாளர்களும், அர்ச்சகர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், சில அர்ச்சகர்களைப் பிடித்துத் தள்ளி விட்டதாகவும் தெரிகிறது.இதற்காக, தர்மேந்திர காஷ்யப் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உத்தரகண்ட் போலீசார் தற்போதுவழக்குப்பதிவு செய்துள்ளனர்.

;