tamilnadu

நெல்லையில் வீட்டுச் சுவர் தகராறு தந்தை-மகள் அடித்துக்கொலை

திருநெல்வேலி, ஜன.16- நெல்லையில் வீட்டுச் சுவர் தகராறில் தந்தை, மகள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர் பாக 3 பேர் கைது செய்யப்பட்ட னர். நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி வேடுவர் காலனியை சேர்ந்தவர் தங்க முத்து (வயது 55), கூலித் தொழி லாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ் என்பவ ருக்கும் சுற்றுச்சுவர் சம்பந்தமாக கடந்த 5 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்தது. இது தொடர் பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.  இந்த நிலையில் பொங்கலுக் காக தங்கமுத்துவின் மகள் சுமதி மற்றும் அவரது கணவர் ஆறு முகம் ஆகியோர் ரெட்டியார்பட்டி யில் இருந்து தந்தை வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது வீட்டு சுற்றுச்சுவர் மட்டும் வெள்ளை யடிக்காமல் இருந்தது. இத னால் புதனன்று தங்கமுத்துவும், அவரது மகள் சுமதியும் சுற்றுச்சுவ ருக்கு வெள்ளையடித்தனர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் கள் பூபதி என்ற அந்தோணிராஜ், ராஜகுமார் ஆகியோர் அங்கு வந்து, “கோர்ட்டில் வழக்கு உள்ள தால் சுவருக்கு வெள்ளை யடிக்கக் கூடாது” என்று கூறி தடுத்தனர். அப்போது அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெய ராஜூம், அவரது மகன்கள் பூபதி, ராஜகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து அங்கு கிடந்த இரும்பு கம்பியால் தங்கமுத்துவையும், அவரது மகள் சுமதியையும் சர மாரி தாக்கினார்கள். இதில் அவர்களது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் ஜெய ராஜூம், அவரது 2 மகன்களும் தப்பி ஓடிவிட்டனர். படுகாயத்து டன் உயிருக்கு போராடிய தந்தை- மகளை நெல்லை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு நெல்லை மாநகர காவல் ஆணை யர் தீபக் தாமோர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் சர வணன், உதவி ஆணையர் பெரி யசாமி, ஆய்வாளர் பர்னபாஸ் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தினார்கள். அப்போது முக் கால் அடி அகலமுள்ள கோட்டை சுவருக்காக மோதல் ஏற்பட்டு 2 பேர் கொலை செய்யப்பட்ட தக வல் கிடைத்தது. இதையடுத்து கொலையாளி களை பிடிக்க உடனடியாக தனிப் படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் விரைந்து செயல் பட்டு, வெளியூருக்கு தப்பி ஓட முயன்ற ஜெயராஜ், அவரது மகன் கள் பூபதி என்ற அந்தோணிராஜ், ராஜகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசா ரணை நடத்தியபோது, “நீதி மன்றத்தில் வழக்கு இருக்கும் போது சுற்றுச்சுவருக்கு வெள்ளை யடித்ததால் ஆத்திரத்தில் அடித்து கொலை செய்தோம்” என்று வாக்கு மூலம் அளித்தனர். இதைத் தொட ர்ந்து கொலை செய்ய பயன்படுத் தப்பட்ட இரும்புக் கம்பியை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

;