states

img

உத்தரகாண்ட்: ஒரே பள்ளியை சேர்ந்த 85 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி  

உத்தரகாண்ட்டில் ஒரே பள்ளியை சேர்ந்த 85 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

உலகம் முழுவதும் கொரோனா தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் நைனித்தால் மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்தியாலயா பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 85 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர்களை தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பள்ளி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.