உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 மருத்துவ மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களை ராகிங் செய்த விவகாரம் தொடர்பாக ஒரு மாணவரின் பெற்றோர் அளித்த புகார் அளித்தார். கடந்த 11-ம் தேதி இரவு, எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களை, முகமூடி அணிந்து கொண்டு வந்த மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் 7 பேர், மாடியில் தள்ளி, கதவை சாத்தியுள்ளனர். நள்ளிரவில் நடுங்கும் குளிரில் மாணவர்கள் இருந்துள்ளனர்
இதைத்தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், இதில் தொடர்புடைய 7 எம்பிபிஎஸ் மாணவர்களை கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.