states

புதுச்சேரி, காரைக்காலில் கடல் சீற்றம்: தயார் நிலையில் மீட்பு குழு...

புதுச்சேரி:
நிவர் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பாதுகாப்புக்கு 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரி வந்துள்ளனர்.

மேலும் புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. 10 முதல் 12 அடி உயரத்திற்கு  அலைகள் வேகம் அதிகமாக உள்ளது. புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.
புதுச்சேரி கடற்கரை பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார்.புயல் எச்சரிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

;