states

அதானியின் நிலக்கரி நடுக்கடலில் விலை உயர்ந்தது எப்படி? ராகுல் காந்தி கேள்வி

அதானி இறக்குமதி செய்த நிலக்கரி, நடுக்கடலில் இரண்டு மடங்காக விலை உயர்ந்தது எப்படி? என்றும், அதானி குழுமம் செய்த நிலக்கரி ஊழலே நாட்டின் மின் கட்டண உயர்வுக்கு காரணம் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல ஆங்கில பத்திரிகையான ‘பைனான்சியல் டைம்ஸ்’ (Financial Times) அதானி நிறுவனம் நிலக்கரி இறக்குமதியில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளதாக ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:

“அதானி குழுமம் இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறது. ஆனால் அந்த நிலக்கரி இந்தியாவுக்கு வரு வதற்குள் நடுக்கடலில் அதன் விலை இரட்டிப்பாகிறது. இதன் காரணமாக மின்சார கட்டணம் உயர்கிறது. 

ஏழை மக்கள் மின்விசிறி, பல்பு போன்றவற்றுக்கான மின்கட்டணத்தை உயர்த்தினால், பணம் நேரடியாக அதானியின் பாக்கெட்டுக்கு செல்கிறது. மக்கள் எந்த சுவிட்சை போட்டாலும் அது பணமாக அதானி பாக்கெட் டுக்கு செல்கிறது. இது நேரடியான திருட்டு வேலை. 

அதானி குழுமம் நிலக்கரி இறக்குமதிக்கு அதிக விலைப்பட்டியலை வழங்குவதால்தான், தங்களின் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்பதை இந்திய குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

அதானியின் ஊழலை லண்டனைச் சேர்ந்த ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆராய முடியும்போது, செபி யால் (SEBI) ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? அதானியிடம் இந்திய அரசால் எந்த விசாரணையும் நடத்த முடியாததற்கு என்ன காரணம்? இவ்வளவு கேள்விகள் இருந்தும் பிரதமர் நரேந்திர மோடி ஏன் அதானிக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடவில்லை? அதானி யிடம் அரசால் எந்த கேள்வியும் கேட்க முடியாது. ஏனென்றால், அதானிக்கு உயர் மட்டத்தில் பாதுகாப்பு உள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.