அரியானா காவல்துறையினர் நடத்திய ரப்பர் குண்டு தாக்குதலில் 3 விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர். சுமார் 200 விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விளைபொருள்களுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக பஞ்சாப்-அரியானா எல்லையான ஷம்பு என்ற பகுதியில், விவசாயிகள் அரியானா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவ்விடத்தில் போராட்டத்தை கலைக்க அரியானா காவல்துறையினர் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசியும், ரப்பர் குண்டுகள் தாக்குதல்களும் நடத்தி வருகின்றனர். இந்த ரப்பர் குண்டு தாக்குதலில் 3 விவசாயிகள் கண் பார்வை இழந்துள்ளனர். சுமார் 200 விவசாயிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.