வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் பார்பேடா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நல்பாரி நகரில் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாக்கும் நோக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் “ஜன ஜாகரன்” என்ற பெயரில் செவ்வாயன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்கள் மட்டுமின்றி காங்கிரஸ் உட்பட 15 கட்சிகளின் “அசாம் ஒன்றுபட்ட எதிர்க்கட்சி மன்றத்தின்” தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.