அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு வருகிற 6 மற்றும் 7ந் தேதி சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோருடனும், வீட்டில் உள்ள பெரியவர்களுடனும் தங்களது நேரத்தை இனிதாக செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
அரசு ஊழியர்கள் பெற்றோருடன் நேரத்தை செலவிட விடுமுறை அளிக்கும் இந்த முடிவுக்கு கடந்த நவம்பர் மாதம் ஒப்புதல் கிடைத்திருந்தது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகள் சிறப்பு விடுமுறை ஆகும். அதனை தொடர்ந்து 8 மற்றும் 9-ந்தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் ஆகும். எனவே அரசு ஊழியர்கள் வீட்டு பெரியவர்களுடன் கூடுதலாக நேரம் செலவிடலாம்" என கூறப்பட்டுள்ளது.