காங்கிரஸ் முன்னாள் தலை வரும், எம்பியுமான ராகுல் காந்தியின் 2-ஆம் கட்ட “இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்” கடந்த வாரம் பாஜக ஆளும் வன்முறை பூமியான மணிப்பூரில் உள்ள தெளபா லில் தொடங்கியது. இந்த யாத்திரை மணிப்பூரை கடந்து 3 நாட்களுக்கு முன் பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நுழைந்த நிலையில், வெள்ளியன்று இரவு லக்கிம்பூரில் யாத்திரை வாக னங்கள் மீது பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பின் குண்டர்கள் தாக் குதல் நடத்தி ராகுல் காந்தி உருவம் அச்சிடப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் களையும் கிழித்தெறிந்தனர். “பாஜக வின் இந்த தாக்குதல், மிரட்டல் தந்தி ரத்திற்கு எல்லாம் பயப்படமாட்டோம்” என இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்த நிலை யில், அருணாச்சலப்பிரதேசம் சென்று மீண்டும் அசாம் நோக்கி யாத்திரை திரும்பிய நிலையில், யாத்திரையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் வாகனத்தையும் முற்றுகை யிட்டு பாஜகவினர் தாக்குதல் நடத்தி யுள்ளனர். வாகனத்தில் இருந்த “இந் திய ஒற்றுமை நீதிப் பயணம்” ஸ்டிக்கர் களையும் கிழித்து தண்ணீரை வீசி எறிந்து பாஜகவினர் வன்முறை செய லில் இறங்கியுள்ளனர்.
அசாமில் இந்திய ஒற்றுமை நீதிப் பயண யாத்திரையை சீர்குலைக்க பாஜக குண்டர்கள் தொடர்ந்து அராஜ கத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், யாத் திரைக்கு பாதுகாப்புக்காக காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் மனித சங்கிலி அமைத்து யாத்திரையை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கி ரஸ் கட்சியில் வெளியேறி பாஜகவில் இணைந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா தான் அசாம் முதல்வராக உள்ளார் என் பது குறிப்பிடத்தக்கது.