states

img

கணுக்கால் அளவு நீரில் படகோட்டிய அசாம் பாஜக அமைச்சர்  

கணுக்கால் அளவு நீரில் அசாம் பாஜக அமைச்சர் படகில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட வீடியோ நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.  

அசாமில் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். மாநிலத்தின் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

இந்த நிலையில் பா.ஜ.கவை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா, நோயாளி ஒருவரை படகில் அமரவைத்து அதை ஓட்டி சென்றுள்ளார். அந்த வீடியோவில் அவருடன் கால் அளவே உள்ள நீரில் சிலர் நடந்து வருவதும் பதிவாகியுள்ளது. அசாம் அமைச்சரின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த முறை வெள்ளம் ஏற்பட்டபோது கணுக்கால் அளவே உள்ள தண்ணீரில் படம்போடுவதற்காக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை படகோட்டியது நகைச்சுவையாக பார்க்கப்பட்டது. அதே பார்முலாவை அஸ்ஸாம் பாஜக அமைச்சர் பின்தொடர்ந்தது 'ஒரேநாடு ஒரே படகு' என்கிற மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

;