states

img

மேற்குவங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - மேலும் 2 பேர் கைது!

மேற்கு வங்கத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் பர்தாமன் மாவட்டத்தில் உள்ள துர்காபூரில், தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒடிசா மாநிலம் ஜலேஷ்வர் சேர்ந்த மாணவி ஒருவர், இரவு உணவு சாப்பிடுவதற்காக தனது நண்பருடன் கல்லூரியில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் மாணவியை கடத்தி சென்று கல்லூரிக்கு அருகே உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மாணவியின் தந்தை துர்காபூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அளித்தார். இவ்வழக்கில் ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 10 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றன் உத்தரவிட்டுள்ளது.