உத்தரகண்ட்டின் கவுரிகுந்த் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் டேராரூனில் இருந்து கேதர்நாத்துக்கு சென்ற ஆரியன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஒன்று, கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக செல்லும் திசை தெரியாமல் விபத்து நிகழ்ந்துள்ளது என ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்துள்ளார்.
இது கடந்த ஆறு வாரங்களில் சார்தாம் யாத்திரைப் பாதையில் நடந்த ஐந்தாவது ஹெலிகாப்டர் விபத்து சம்பவமாகும். இந்த சூழலில் சார்தாம் யாத்திரைக்காக ஆரியன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் செயல்பாடுகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நிறுத்தியது.