states

img

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட பிபிசி-யின் ஆவணப்படம்!

2002-இல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி-யின் ஆவணப்படம், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது. 

பிபிசி நிறுவனம் சில தினங்களுக்கு முன் “இந்தியா: மோடிக்கான கேள்விகள்” என்கிற ஆவணப்படத்தின் முதல் பகுதியை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல் இருந்ததாக அப்போதைய மோடி அரசுமீது பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்குள் வெளியிடப்படாத இப்படம், டிவிட்டர் மற்றும் யுடியூப் போன்றவற்றில் பகிரப்பட்ட நிலையில், இந்திய ஒன்றிய அரசு ‘அவசரநிலைக் காலத்தில் தகவல்களைத் தடுப்பதற்கான தகவல் தொழில்நுட்பச்சட்டம் 2021 பிரிவு 16’ வழங்கியுள்ள அதிகாரத்தை ஏவி, அப்படத்தை நீக்குமாறு டிவிட்டர், யுடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, நீக்கச் செய்துள்ளது. இந்த நிலையில், ஐதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கு இப்படம் திரையிடப்பட்டுள்ளது.  

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகையில், "ஒன்றிய அரசு தடை விதிப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னாள் இந்த ஆவணப்படம் திரையிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாணவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்படம் திரையிடப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.