states

கல்வி நிதி: வில்சன் எம்.பி., குற்றச்சாட்டு

சென்னை: கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் வில்சன், ரூ.3,548 கோடி சமக்ர சிக்ஷா  திட்ட நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு தமிழகத்தை தண்டிக்கிறது.  கல்வி நிதி வழங்கப்படாததால் 44 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நீண்ட காலம் பணியி லுள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுதச் செல்வதால் தமிழ்நாட்டில்  4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலம் பணியாற்றிய  ஆசிரியர்களை டெட் தேர்வு எழுத கட்டாயப்படுத்தக் கூடாது  என வில்சன் வலியுறுத்தியுள்ளார்.