states

img

ராஜஸ்தான்: கரன்பூர் இடைத்தேர்தலில் பாஜக அமைச்சர் படுதோல்வி!

ராஜஸ்தானில் கரன்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த தேர்தலில் அம்மாநிலத்தின் பாஜக அமைச்சர் சுரேந்திர பால் சிங் படுதோல்வி அடைந்தார். 
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர் உயிரிழந்ததால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. இதை அடுத்து கரன்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனவரி 5 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 81.38 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர பால் சிங்கை தோற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750-வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 
முன்னதாக ராஜஸ்தான் மாநில பாஜக அரசு, தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே சுரேந்திர பால் சிங்குக்கு அமைச்சர் பதவி வழங்கியது. தற்போது தேர்தலில் தோல்வியடைந்த சுரேந்திர பால் சிங், அமைச்சர் பதவியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.