states

img

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விளையாட்டு போட்டி

புதுச்சேரி,பிப்.28- புதுச்சேரி காதுகேளாதோர் விளை யாட்டு மையம் சார்பில் 6-வது புதுச்சேரி மாநில அளவிலான காது கேளா தோருக்கான டி 20 சாம்பியன் ஷிப் கிரிக்கெட் போட்டி கோரிமேடு பல்மைரா மைதானத்தில் நடை பெற்றது.  புதுச்சேரி கிங்ஸ், காரைக்கால் டைகர்ஸ், மாஹே னைட்ஸ், ஏனாம் ரைடர்ஸ் என்ற 4 அணிகள் இதில் பங்கேற்றுனர். இறுதிப் போட்டியில் புதுச்சேரி கிங்ஸ், ஏனாம் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் புதுச்சேரி அணியை வீழ்த்தி ஏனாம் அணி வெற்றி பெற்றது.  வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை விளையாட்டு மையத்தின் நிர்வாகிகள் ரவிக்குமார் மற்றும் கிரஸ் அகில இந்திய வழக்கறிஞர் சங்கதின் தேசியக்குழு உறுப்பினரும், புதுச்சேரி காதுகேளாதோர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சரவணன், துணை தலைவர் பாலமுருகன் ,  மொழிபெயர்ப்பாளர் ஹபில்லா , நிர்வாகி ராஜேஷ் , டிப்ஸ் எனேபிள் பவுண்டேஷன் நிர்வாகத் தலைவர் வெற்றி வேலன் ஆகி யோர் வழங்கினர். போட்டிகள், விழாவுக்கான ஏற்பாடு களை காதுகேளாதோர் மையத்தின் ஒருங்கி ணைப்பு தலைவர் பஷீத் தலைமையில் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.