புதுச்சேரி , ஜூலை 11- ஆட்டோ தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு புதுச்சேரி அரசு உத்தரவிடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வலியுறுத்தியுள்hர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- புதுச்சேரி அரியாங்குப்பம் தபால்காரன் வீதியில் கடந்த 7.7.2022 அன்று ஒரு ஆட்டோ தொழிலாளியும் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் என குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆட்டோக்களை சொந்தமாக வைத்து வாழ்ந்து வந்த ஆட்டோ தொழிலாளி வரவுக்கு மீறிய செலவு செய்து கடன் வலையில் வீழ்ந்து உயிரையே மாய்த்துள்ளார் என்று பெரும்பாலானோர் கருதியுள்ளனர். ஆனால் அப்பகுதியில் நேரில் சென்று விசாரிக்கும் போது வெளியில் தலைக் காட்டமுடியாத நிலையில், வெளிக் கதவை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் வாழும் நிலையில் தான் அந்த குடும்பம் இருந்தது. கந்து வட்டி கும்பல் வலையில் சிக்கி சீரழிந்திருப்பது பின்னர் தான் தெரிய வருகிறது. கடன் கொடுத்த கந்து வட்டிக்கும்பல் பலமுறை வீட்டில் உள்ள பெண்களை அவமரியாதையாக பேசு வது உன் கணவனை வெட்டிக் கொன்று விடுவோம் என்று மிரட்டுவது என்ப தெல்லாம் நடந்திருக்கிறது . மேலும் கந்து வட்டி கும்பல் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை வலு கட்டாயமாக தங்களது செல்பேசியில் புகைப்படம் எடுத்து வைத்தும் மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடன் கொடுத்த தனியார் நுண் நிதி நிறு வன அதிகாரிகள் கடன் வாங்கியவர் களை, குறிப்பாக பெண்களை மிரட்டுவது சில நேரங்களில் அடித்து துன்புறுத்துவது என்று பல விதமான கொடுமைகள் நிகழ்த்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய கொடுமைகளை தாங்கமுடியாத பல குடும்பங்களில் இறப்பு என்பதே தீர்வு என்ற அவநம்பிக்கையில் உண்மை வெளியே தெரியப்படுத்தாமல் உயிரை மாய்த்து கொள்ளும் அவலம் நடந்து வருகிறது.
விசாரணைக்கு உத்தரவிடுக
ஆட்டோ தொழிலாளியின் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அரியாங்குப்பம் காவல்நிலையம் எந்த அசை வும் இல்லாமல், மேற்கொண்ட விசாணை யும் நடத்த வில்லை என்பது வேதனை அளிக் கிறது. காவல்துறையை சேர்ந்த ஒரு பகுதி யினருக்கும், கந்துவட்டி கும்பலுக்கும் உள்ள தொடர்பு காரணமாக எந்த விசார ணையும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். இச்சம்பவம் குறித்த மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தர விட வேண்டும். இதேபோல் 50க்கும் மேற்பட்ட நுண்நிதி கந்து வட்டி நிறுவனங்கள் புதுச்சேரியில் செயல்படுகின்றன. இவர்க ளும் இதேநிலையில் தான் ஏழை எளிய மக்களை மிரட்டி வருகிறார்கள். ஆகவே அந்நிறுவனங்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.