states

img

கேரளாவில் 9 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை- வானிலை ஆய்வு மையம்

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் 9 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரம் தாமதாக நேற்று(08-06-2023) தொடங்கியுள்ளது.அந்தமான் பகுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை மாநிலம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.

தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம்,பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஜூன் 12-ஆம் தேதி வரை மிகக் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பான அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.