states

img

நாட்டு வெடிகுண்டு தயாரித்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்  நாட்டு வெடிகுண்டு தயாரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் பிஜூ. 40 ஆர்.எஸ்.எஸ். பிரமுகராக அந்த பகுதியில் வலம் வந்து கொண்டிருப்பவர்.  கடந்த 2016ல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தன்ராஜ் கொலை வழக்கில் பிஜூவுக்கும் தொடர்புடையதாக, பிஜூ மீது கேரளா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தன்ராஜ் கொலை வழக்கு தவிர, பிஜூ மீது மேலும் 4 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பிஜூ திங்களன்று தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராமல், நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பிஜூவின் இடது கையில் இரு விரல்கள் துண்டானது. இதைத் தொடர்ந்து, மலபார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் நாட்டு வெடிகுண்டு தயாரித்ததன் மூலம் கேரளாவில் அசம்பாவித சம்பவங்களை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறீர்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.