பெரியாரின் இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் தந்தை பெரியாரை நினைவுகூர்ந்து, வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெரியாரின் இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
“பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.
பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.