கேரளத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தவுடன், முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டுவர தேவையில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளத்தின் பொதுக் கல்வித் துறை, 2025-2026 கல்வியாண்டின் முதல் இரண்டு வாரங்கள் வழக்கமான பாடப்புத்தகப் பாடத்திட்டத்திற்குப் பதிலாக சமூக விழிப்புணர்வு வகுப்புகளுக்கு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த முயற்சி நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும். மேலும் இது மாணவர்களுக்கு அழுத்தமான சமூகப் பிரச்சினைகள் குறித்து கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதல் 2 வாரங்களில், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட வகுப்புகள் நடைபெறுகிறது.
ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி 2 வாரங்களுக்கு, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்த விழிப்புணர்வு வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அதே நேரத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு இதேபோன்ற திட்டம் இருக்கும். கலை, விளையாட்டு மற்றும் சமூகப் பிரச்சினை கல்விக்கு போதுமான நேரத்தை உறுதி செய்வதற்காக பள்ளிகளும் தங்கள் கால அட்டவணைகளை மாற்றியமைப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.