கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக, வரும் மே 10-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தில்லியில் நடந்த செய்தியாளர்களைச் சந்தித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார். அதன்படி, கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக, வரும் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 13-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்ரல் 24-ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.