ஐசியூ-வில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை
காந்திநகர் : 2025 அக்டோபர் மாதம் குஜராத் மாநிலத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் பெற்றோரிடம் உடனடியாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அந்த பிரச்சனையை மூடி மறைத்துள்ளது. சம்பவத்தன்றே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அப்பெண்ணின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததால், வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது குணமடைந்த நிலையில், தற்போது சபர்மதி காவல் நிலையத்தில் அவர் முறைப்படி புகார் அளித்துள்ளார்.