ரிசர்வ் வங்கி துணைநிலை ஆளுநராக ஷிரிஷ் முர்மு நியமனம்
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்ப வர் சஞ்சய் மல்ஹோத்ரா. பூர்ணம் குப்தா, சுவாமிநாதன் ஜானகிராமன், ராஜேஸ்வர் ராவ், ரபி சங்கர் ஆகிய 4 பேர் துணை ஆளுநர்களாக உள்ளனர். இதில் ராஜேஸ்வர் ராவ் அக்., 8 அன்று ஓய்வு பெறுகிறார். அவரது இடத்தில் ஷிரிஷ் சந்திர முர்மு புதிய துணை ஆளு நராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு திங்கள் கிழமை அன்று வெளியிட்டது. அக்., 9 அன்று துணை ஆளுநராக பொறுப்பேற் கும் ஷிரிஷ் சந்திர முர்மு, தற்போது ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக செயல் பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.