விஜய்யின் காணொலி உரை பொறுப்பற்றது; அரசியல் உள்நோக்கம் கொண்டது!
சென்னை, செப். 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: மீட்புப் பணியில் பொதுமக்கள் தமிழக வெற்றிக் கழகம் செப்டம்பர் 27 அன்று கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி இதுவரை 41 அப்பாவி மக்களின் உயிர்கள் பறி போயுள்ளன. பலர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விரும்பத்தகாத நிகழ்வு நடைபெற்ற நொடியில் இருந்தே தன்னார்வத்துடன் பொதுமக்களும், மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வா கத்தினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களின் மதிப்புமிக்க உயிர் களைப் பாதுகாத்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட அமைச்சர்களும், அதிகாரிகளும் 27 அன்று இரவு முதலே நேரில் கரூர் சென்று மீட்புப் பணிகளை விரைவுபடுத்தினர். உயி ரிழந்தவர்களுக்கும், காயமடைந்த வர்களுக்கும் நிவாரணத் தொகையை யும் அரசு சார்பில் வழங்கினர். அனைத்துக் கட்சியினர் ஆறுதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உட்பட தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலை வர்களும் நேரில் கரூர் சென்று பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது ஆறுதலையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசால், ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமை யில் ஆணையம் அமைக்கப்பட்டு விசா ரணை துவங்கியுள்ளது. காவல்துறை மட்டத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல்வேறு தரப்பினர் நீதிமன்றத்தையும் நாடியுள்ளனர். இதன் மூலம் மேலும் விபரங்கள் தெரியவர வாய்ப்புள்ளது. நன்றி தெரிவிப்பதே பொருத்தம் இந்நிலையில் இந்த கொடும் சம்ப வம் நடைபெற்று மூன்று தினங்களுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலை வர் காணொளி ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில், தனது கட்சி நடத்திய நிகழ்வில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்பு களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் மாநில அரசும், அரசியல் கட்சிகளும், மக்களும் செய்திட்ட உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதே சரியானதாக இருக்க முடியும். ஆனால், தான் மிக மிகத் தாமத மாக வந்தது குறித்தோ, பரப்புரையின் போது நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டிருந்த நேரத்தில் தனது தொண்டர்களை கட்டுப்படுத்த முயற்சிக் காதது, உடனடியாக கரூரை விட்டு வெளியேறியதற்கான காரணங்களைப் பற்றியோ காணொளியில் ஒரு வார்த்தை கூட தெரிவிக்காத விஜய்-யின் உரை, மாறாக முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. தூண்டி விடுகிறார் விஜய் உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கு மாறாக, அரசு நிர்வா கத்தின் மீது பழி சுமத்துவதாகவே இருக்கி றது. 41 உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலை யில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கை யும் கூட, தன்னையும் தன் கட்சித் தொண்டர்களையும் பழிவாங்குவதற் கான மாநில அரசின் சதி என்கிறார். தனது கட்சித் தொண்டர்களை தூண்டி விடும் விதமாகவே அவரது உரை அமைந்துள்ளது. இதுபோன்ற அரசியல் உள்நோக் கம் கொண்ட பொறுப்பற்ற கருத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் பறிபோயுள்ள நிலையில் தலைமைப் பண்பையும், மனித மாண்பையும் வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில், விஜய் வெளியிட்டுள்ள காணொளி எவ்வகையிலும் ஏற்புடை யதல்ல. இத்தகைய உள்நோக்கங் களைக் கொண்ட விஜய் அவர்களின் அரசியல் பயணம் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ளது.