states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் குமார் ஜா

பிரதமர் மோடி வழக்கம் போல தேர்தல் நேரத்தில் பீகார் வருகிறார். 2024இல் அடிக்கல் நாட்டிய அதே திட்டத்திற்கு, மீண்டும் அடிக்கல் நாட்டுகிறார். பீகார் மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை மோடி முதலில் உணர வேண்டும். அதே நேரத்தில் பீகாரை மீண்டும் ஏலத்தில் விட வேண்டாம் என்பதை பிரதமர் மோடிக்கு  நான் கோரிக்கை விடுக்கிறேன்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அனில் குமார்

பிஆர்எஸ் மற்றும் பாஜக ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக மாறிவிட்டன. இது பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் பேச்சு மூலமாக தெரிகிறது. தெலுங்கானாவில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் “இளஞ்சிவப்பு” நிறம், “காவி” வண்ணமாக காட்சி அளிக்கிறது. பாஜகவுடன் கைகோர்த்தால் பிஆர்எஸ் கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத்

பஹல்காம் பயங்கரவாதிகள் இன்னும் கைது செய்யப்படாததற்கு காரணங்கள் எதுவும் கிடையாது. ஆனால்  ஒருநாள் 6 பயங்கரவாதிகள் பாஜகவில் சேர்ந்துவிட்டதாக, அக்கட்சியின் அலுவலகத்திலிருந்து ஒரு செய்திக் குறிப்பு வரும். அதனால் இப்போது அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

திரிணாமுல் எம்.பி., ரிதப்ரதா பானர்ஜி

பிரதமர் மோடியின் “ஆபரேசன் பெங்கால்” உரை மூலம் மேற்கு வங்கத்தில் அவரது தேர்தல் வித்தை தொடங்கிவிட்டது. “ஆபரேசன் சிந்தூர்” விவகாரத்தை மோடி அரசியலாக்க முயற்சிக்கிறார். 2016 முதல் மேற்கு வங்கத்திற்கு வெறும் வார்த்தைகளுடனே வந்து செல்கிறார்.