states

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

சிபிஎம் வேட்பாளர்  எம்.சுவராஜ்க்கு நிலம்பூர் மக்கள் உற்சாக வரவேற்பு

கேரள மாநிலம் நிலம்பூர் இடைத்தேர்தலில் போட்டி யிடும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் எம்.சுவராஜுக்கு நிலம்பூர் ரயில் நிலை யத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக தொகுதிக்கு வந்த சுவராஜை, பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் மேளதாளத்துடன் வரவேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ. விஜயராகவன் தலைமையில் இந்த  வரவேற்பு அளிக்கப்பட்டது. நிலம்பூர் நீதி மன்றம் அருகில் இருந்து தொடங்கிய எல்டிஎப் வேட்பாளர் சுவராஜின் சாலைப் பயணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இந்தோனேசியா ஆதரவு ஜான் பிரிட்டாஸ் எம்.பி., தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்கு தல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக விளக்கம் அளிக்க இந்திய அரசின் அனைத்துக் கட்சிக் குழு உலக நாடுகளுக்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் அடங்கிய 3ஆவது குழு ஜப்பான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூருக்குச் சென்ற பிறகு இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவை வந்தடைந்தது. அந் நாட்டு தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பின் டாக்டர். ஜான் பிரிட்டாஸ் எம்.பி., கூறுகையில், “இந்தோனேசியா பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலகிற்கு எடுத்துச் செல்லும் இந்த குழு இந்தியாவில் ஜனநாயகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. அதனால்தான் பாகிஸ் தானிலிருந்து இந்தியா வேறுபட்டது” என அவர் கூறினார்.

கொரோனா : தில்லியில் பெண் உயிரிழப்பு

3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கி உள்ளது. ஜேஎன்.1 மாறுபாடு (ஓமிக்ரானின் துணை திரிபு) நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தில்லியில் இந்த ஆண்டு முதல்முறையாக கொரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் குடல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும் தற்செயலாக செய்யப்பட்ட பரிசோதனையின் போது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன. தில்லியைப் போன்று கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் நீண்ட இடை வெளிக்குப் பிறகு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5க்கும் மேற் பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகத்தில் 5 மாதத்தில்  700 குழந்தை திருமணங்கள்

காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஒரே ஆண்டில் 700 குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளதாக சமூக பாதுகாப்பு அறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.  இதுதொடர்பாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது, “கர்நாடக மாநிலத்தில் 2025ஆம் ஆண்டின் 5 மாதங்களில் மொத்தம் 3,049 குழந்தை திருமண முயற்சிகள் பதிவாகி யுள்ளன. அவற்றில் 2,349-ஐ அதிகாரிகள் வெற்றிகரமாகத் தடுத்துள்ளனர். எனினும் 700 குழந்தை திருமணங்கள் நிகழ்ந்துள்ளன. மைனர் பெண்களின் கர்ப்பம் மூலமாக குழந்தை திரு மணங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. குழந்தை திருமணங்களில் 50%க்கும் அதிகமானவை சிவமொக்கா, பெலகாவி, சித்ரதுர்கா, பாகல்கோட் மற்றும் மைசூர் மாவட்டங்களில் நடை பெற்றுள்ளன” என அதில் கூறப் பட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகள் நியமனம் இதுதொடர்பாக கர்நாடக முதல மைச்சர் சித்தராமையா கூறுகையில், “சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களு க்குப் பிறகும், ஒரு வருடத்தில் 700 குழந்தைத் திருமணங்கள் என்பது அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் ஆகும். பலமான சட்டங்கள் இருந்தும், சில பிராந்தியங்களில் அவற்றின் செயல் படுத்தல் மோசமாகவே உள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கூறி, குழந்தை திருமணங்களை தடுக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து உத்தர விட்டார்.

விழிஞ்ஞத்தில் காணாமல் போன 8 மீனவர்களும் மீட்பு

கேரள மாநிலம் திருவனந்த புரம் விழிஞ்ஞம் கடற்கரை யிலிருந்து மே 29 வியாழ னன்று மதியம் இரண்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள் காணா மல் போயினர்.  விழிஞ்ஞத்தைச் சேர்ந்த ராபின்சன் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற ராபின்சன், டேவிட்சன், தாசன், யேசுதாசன் ஆகியோரும், லாசருக்குச் சொந்தமான படகில் பயணம் செய்த ஜோசப், ஜானி, மத்தியாஸ், முத்தப் பன் ஆகியோரும் காணாமல் போயி னர். வெள்ளியன்று காலை திரும்பி வராத நிலையில், அவர்களது உற வினர்கள் விழிஞ்ஞத்தில் உள்ள மீன்வள அலுவலகத்திற்கு தகவல் தெரி வித்தனர். கடுமையான காற்றில் உலைந்த படகுகள் கடலுக்குள் காணாமல் போயின. மூன்று நாட்களாக நடை பெற்று வந்த தேடுதலின் போது, நிவாரணப் படகில் இருந்த மீனவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது படகின் உரிமை யாளர் ராபின்சன், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருப்பதாகத் தெரிவித்தார். படகில் இருந்த ராபின்சன், டேவிட்சன், தாசன், யேசுதாசன் ஆகியோர் பாதுகாப்பாக உள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும், தேடுதலில் ஈடுபட்டிருந்த கடலோர காவல்துறை மற்றும் கடற்படையினர் குளச்சலுக்கு புறப்பட்டனர். பின்னர், மரைன் அமலாக்கப் படகு எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுடன் குளச்சலுக்கு புறப்பட்டது. இதற்கிடையில், மற்றொரு படகில் இருந்த, ஜானி, ஜோசப், மத்தியாஸ், முத்தப்பன் ஆகிய நான்கு பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. சனியன்று பிற்பகல் கடலுக்குள் கவிழ்ந்து கிடந்த படகின் மீது அமர்ந்திருந்த நால்வரை யும் தேடுதல் குழுவினர் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். காணா மல்போன 8 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது குடும்பத்தினருக்கு ஆறுதலளித்து உள்ளது.