நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் இடங்கள் அதிகரிப்பு
தமிழக அரசுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தல் சென்னை, ஜூன் 5 - அரசு மருத்துவமனைகளில் நோ யாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போ ராட்டக்குழு தலைவர் மரு. எஸ். பெரு மாள் பிள்ளை வலியுறுத்தினார். இதுதொடர்பாக புதனன்று (ஜூன் 4) சென்னையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், “அரசு மருத்து வர்களுக்கு அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் 4 ஊதிய உயர்வு (ஊதியப்பட்டை) வழங்க வேண்டும். கொரோனாவில் பணியாற்றி உயிரிழந்த மரு. விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும். பேரி டரின் போது உயிரிழந்த அரசு மருத்து வர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்து வமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்திய அவர், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க அரசு மறுக்கிறது. அரசு மருத்துவர்களை அங்கீகரிக்க மறுக்கிறது. இந்நிலை யில், ஜூன் 11 அன்று சேலத்தில் இருந்து சென்னை நோக்கி மருத்துவர்கள் பாதயாத்திரை நடத்த உள்ளோம் என்றும் கூறினார். இந்த சந்திப்பின் போது மருத்து வர்கள் பாலமுருகன், சத்திய மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.