tamilnadu

img

ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் காலமானார் காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி

ஓய்வுபெற்ற நீதிபதி  எம்.எஸ்.ஜனார்த்தனம் காலமானார் 

காவல்துறை மரியாதையுடன் இறுதி நிகழ்ச்சி

சென்னை, ஜூன் 6 - சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர், தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் (89) உடல் நலக்குறைவால் ஜூன் 6 அன்று காலமானார். வரலாற்றுத் தீர்ப்புகள் நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம், 1988 முதல் 1998 ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி யாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்பு களை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. சமூக நீதி வரலாற்றில் தமது முத்திரையை மிக வும் ஆழமாக பதித்தவர் இவர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், நீதித்து றையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  “நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு, சமூக நீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.  அன்னார் நீதித் துறைக்கும், மாநி லத்திற்கும் ஆற்றிய சேவையை போற்றும் வகையில் அவரது இறுதி நிகழ்வு காவல்துறை மரியாதையுடன் நடை பெறும்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

நீதியரசர் ஜனார்த்தனன் மறை வுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: “ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுற்ற செய்தி மிகுந்த  வருத்தத்தை அளிக்கிறது. அவ ரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தனது பணிக்காலத்தில் சீரிய முறையில் நீதித்துறையில் பணியாற்றி யவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் ஆவார். பணி ஓய்வுக்காலத்தில் பல்வேறு குழுக்களுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றில் இடம் பெறத்தக்க மிக முக்கியமான பரிந்துரைகளை வழங்கியவர்.  குறிப்பாக, அருந்ததியர் சமூகப் பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் 2006 ஆம் ஆண்டு முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. மாநிலம் முழுவதும் சிறப்பு மாநாடுகளை நடத்தியதோடு தலை நகர் சென்னையில் பல்லாயிரக்கணக் கானவர்கள் பங்கேற்ற கோரிக்கைப் பேரணியை நடத்தியது.  அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டவுடன் அதற்கு செயல்வடிவம் தருவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர்  குழுவை பொறுப்பேற்று திறம்பட நடத்தி யவர். அக்குழுவின் அறிக்கையின் படியே அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டப்படியாக நிறு வப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக  பொறுப்பேற்று அறிக்கை தயாரித்து அளித்தவரும் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்கள் தான்.  இத்தகைய பங்களிப்புகள் செய்திட்ட ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் மறைவு  நீதித்துறைக்கும், சமூக நீதிக்காக போராடும் ஜனநாயக இயக்கங் களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரது மறைவால் துயருற்றி ருக்கும் அன்னாரது குடும்பத்தின ருக்கும், நண்பர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது” இவ்வாறு பெ. சண்முகம் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.