ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது ரிசர்வ் வங்கி!
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது; ஜிடிபி-யிலும் அடி
புதுதில்லி, ஜூன் 6 - வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை (Repo Rate) இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் 50 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 6 சதவிகிதமாக இருந்த, ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதக் குறைப்பி னால், வங்கிக் கடன் பெற்றவர்கள் வட்டித் தள்ளுபடி பெற வாய்ப்புள் ளது. குறிப்பாக, வீடு, வாகனக் கடன் பெற்றவர்களுக்கான மாதத் தவணை (EMI) தொகை கணிசமாகக் குறையலாம். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்திற்குப் பின், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு முடிவை வெளி யிட்ட சஞ்சய் மல்ஹோத்ரா, “உலகளா விய சூழல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிறது. அதன்படி, இன்றைய நாணயக் கொள்கை நடவடிக்கைகளானது, வளர்ச்சியை ஒரு உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துவதற்கான நடவடிக்கை” என்று தெரிவித்தார். அதாவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP) அடிவாங்கியுள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு, மிகக் குறைவான ஜிடிபி-யை இப்போது இந்தியா பதிவு செய்துள்ளது. 6.5 சதவிகிதத்தைத் தாண்டாத வளர்ச்சி 2025-26 நிதியாண்டிற்கான இந்தி யாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவிகிதம் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. முன்னதாக, 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிலும் பொருளாதாரம் 6.5 சதவிகிதம் என்ற அளவிலேயே வளர்ச்சியடைந்தது. இது கொரோனா காலத்திற்கு பிந்தைய, மிகக் குறைவான ஜிடிபி ஆகும். உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் என்ற பெயரை, அண்மையில் இந்தியா பெற்றாலும், வளர்ச்சி மந்தமாகவே உள்ளன. 2025 மார்ச் வரையிலான நான்கா வது காலாண்டில் அதிகபட்சம் 7.4 சத விகித வளர்ச்சி பதிவானது. எனினும், இது கடந்த சில ஆண்டுகளில் பதி வான 8 சதவிகித வளர்ச்சி விகிதத்தி லிருந்து குறைவானதாகும். 4.0 சதவிகிதமாக இருந்த பண வீக்க விகிதம், தற்போது 3.7 சதவிகிதமாக குறைந்துள்ளது என்றா லும், மக்களிடம் பணப் புழக்கம் இல்லை. ஜிடிபி வளர்ச்சியை கூட்ட வேண்டுமெனில் மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகரிக்கவேண்டும். 3 மாதங்களுக்குள் 2 முறை குறைப்பு எனவே தான், பொருளாதார வேகத்தை மேம்படுத்த பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டு நுகர்வு மற்றும் மூலதன முதலீட்டை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அதனொரு பகுதியாக ரெப்போ வட்டி விகிதத்தை, மூன்று மாதங்களுக்குள் இரண்டு முறை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக ரெப்போ விகிதம் குறைக்கப்படாமல் 6.5 சத விகிதமாக இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி 5 அன்று, ரெப்போ வட்டி விகி தத்தை 6.50 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவிகிதமாக ரிசர்வ் வங்கி குறைத்திருந்தது. தொடா்ந்து, ஏப்ரல் மாதமும் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகி தமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலை யில், தற்போது மேலும் 0.50 சத விகிதத்தை குறைத்து 5.5 சதவிகித மாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.