states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

பீகாரில் 85% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த புதிய சட்டத்தை நிறைவேற்றத் தவறினால் 90% பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக நான் ஒரு பெரிய போராட்டத்தைத் தொடங்குவேன்.

மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி

பஹல்காம் சம்பவத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர். பலர் விடுவிக்கப்பட்டாலும், பலர் இன்னும் சிறையில் உள்ளனர். எனக்குத் தெரிந்த தகவலின்படி, சுமார் 200 பேர் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (PSA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அமைதி திரும்ப எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி தகவல் எதுவும் இல்லை.

மகாத்மா காந்தி பேரன் துஷார் காந்தி

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராகப் போட்டி யிடும் மகா கூட்டணியுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். நிதிஷ் குமார் எப்போதும் தவறான பக்கத்தில் சேர்கிறார். அதனால்தான் அவருக்குப் பாடம் புகட்டுவது முக்கியம். 

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

அமெரிக்காவின் தலையீடால்தான் இந்தியா-பாகிஸ்தான் மோதல் நின்றது என்ற டிரம்பின் கூற்றை ரஷ்யாவும் குறிப்பிட்டிருக்கிறது. புடினிடம் பேசுகையில் டிரம்ப் இப்படி சொன்னதாக ரஷ்ய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. எந்த தலையீடும் இல்லை என இந்தியா பலமுறை சொன்ன பிறகும் கூட, டிரம்ப் தொடர்ந்து ஒன்றிய அரசை அவமதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.