பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வியாழனன்று புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. 10ஆவது முறையாக 74 வயது நிதிஷ்குமார் (ஐக்கிய ஜனதா தளம்) முதலமைச்சராக பதவி ஏற்றார். விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் பங்கேற்றனர்.
