states

img

தமிழ்நாட்டிற்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் எங்கே?

கார்ப்பரேட்டுகளுக்கு வரி விதிக்க மறுப்பதேன்...

புதுதில்லி, பிப். 5 - ஒரு சதவிகிதமாக உள்ள கார்ப்ப ரேட்டுகள், நாட்டின் 40 சதவிகித சொத்துக் களை வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு ஒன்றிய பாஜக அரசு வரி விதிக்க மறுப்பதேன்? என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்க டேசன் எம்.பி. கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படாததற்கும் அவர் கண்டனம் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று, சு. வெங்கடேசன் எம்.பி. பேசியது வரு மாறு:

ஏஐ தொழில்நுட்பத்தில் சீனா; கோமூத்திர ஆராய்ச்சியில் நாம்..

உலக மக்கள் தொகையில் 20 சத விகித மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா உலக வர்த்தகத்தில் 2 சத விகிதத்தை மட்டுமே தன் பங்காகக் கொண்டிருக்கிறது. சேவைத்துறையில் 4.6 சதவிகிதமும், உலக சுற்றுலாத் துறையில் 1.5 சதவிகிதமும் மட்டுமே நம்முடைய பங்காக இருக்கிறது. நம்மு டைய இந்த பின்தங்கிய நிலைக்கு நாம் தான் காரணம்.  செயற்கை நுண்ணறிவு தொழில்நுட் பத்தில் சீனாவின் டீப்சீக் AI உலக அளவில் இன்றைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை எதிர் கொள்வதற்கான நடவடிக்கையைத் துவங்கிவிட்டார்கள். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்..? இந்தியாவினுடைய பெருமை மிகுந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி (IIT)யின் இயக்குநர் “தான் தினமும் கோமூத்திரம் குடிப்பதாகவும், அதற்கு மருத்துவக் குணம் இருப்பதாகவும் சொல்கிறார்”. போலி மருத்துவத்தை, போலி அறிவியலை பரப்புகிற வேலையைச் செய்கிறார்கள். 

கார்ப்பரேட்டுக்கு  வரி விதிக்க மறுப்பதேன்?

ஒரே தேசம் ஒரே வரிவிதிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஒரு சதமான மக்களிடம் 40 சதமான வருமானம் சென்று சேருகிறது. அந்த ஒரு சதம் மக்களுக்கு போதுமான வரியை விதித்தால், மீதமுள்ள 99 சதமானோர் வரி செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்பதற்கு இதுவே உதாரணம். ஒரே வரிக் கொள்கை எங்கே இருக்கிறது? ஒரு பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதிக்கிறீர்கள். பொட்டலம் கட்டாத பாப்கார்னுக்கு 5 சதவிகிதம் வரி. அட்டைப்பெட்டியில் இருக்கும் பாப்கார்னுக்கு 12 சதவிகிதம் வரி. இனிப்பு தடவிய பாப்கார்னுக்கு 18 சதவிகிதம் வரி.  குடியரசுத் தலைவரின் உரையில் இருக்கும் மற்றொரு விஷயம், இந்த  ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் தேவையை  மறுக்கிற அரசாக, தமிழ்நாட்டின் உரிமை யை மறுக்கிற அரசாக, தமிழ்நாட்டின் பெருமையை மறுக்கிற அரசாக இருக்கிறது. 

மதுரை, கோவைக்கு   மெட்ரோ ரயில் சேவை எங்கே?

இந்தியாவின் மெட்ரோ ரயில் பாதையின் தூரம் ஆயிரம் கி.மீ. கடந்திருப்பதாகவும், 1000 கிலோ மீட்டர் பயணப்பாதையை உருவாக்கியதன் மூலம் மெட்ரோ ரயில் சேவையில் உல கின் மூன்றாவது பெரிய நாடு என்றும் குடியரசு தலைவர் தனது உரையில் பெருமையோடு குறிப்பிட்டார். நான் கேட்கிறேன், இந்த ஆயிரம் கிலோ மீட்டரில் தமிழ்நாட்டில் இயங்குகிற மெட்ரோவின் அளவு எவ்வளவு தெரியுமா? வெறும் 54 கிலோ மீட்டர் மட்டும் தான். உத்தரப் பிரதேசத்தில் 5 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. மகாராஷ்டிராவில் 4 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. குஜராத்தில் 2 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் 2 நகரங்களில் மெட்ரோ இயங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு நகரத்தில் மட்டும் தான் 54 கிலோமீட்டர் மட்டும் தான் மெட்ரோ இயங்குகிறது. மதுரையினுடைய மெட்ரோ எங்கே? கோவையினுடைய மெட்ரோ எங்கே?  என்று மாநில அரசு மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகிறது. நாங்களும் இந்த அவையில் கேள்வி எழுப்புகிறோம். ஒன்றிய அரசு இப்பொழுது வரை பதில் சொல்ல மறுக்கிறது. நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது. 

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முறியடித்த மக்கள் போராட்டம்

அதேநேரத்தில் பெருமையோடு நாங்கள் அனைவரும் சொல்லிக் கொள்வோம், உங்களது டங்ஸ்டன் சுரங்க சதித்திட்டத்தை முறியடித்த பெரு மையோடு தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவையிலே நின்று கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் தனித்தீர்மானத்தை சட்ட மன்றத்தில் கொண்டு வந்து நிறை வேற்றினார். மதுரை மாவட்டத்தின் மேலூர் ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானத்தை நிறை வேற்றினோம். ஆனாலும் ஒன்றிய அமைச்சர் டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட மாட்டோம் என ஒரு முறை, இரு முறையல்ல மூன்று முறை அறிக்கை விட்டார்.  ஆனாலும் நாங்கள் தளரவில்லை, விடாப்பிடியான போராட்டத்தை 77 நாட்கள் நடத்தியதால் இன்றைக்கு வெற்றியோடு நாங்கள் வந்திருக் கிறோம். இந்த வெற்றிக்குப் பிறகு ஒன்றிய அமைச்சர், “மக்கள் இனிமேல் நிம்மதியாகத் தூங்குவார்கள்” என்று சொல்கிறார். மக்கள் இனிமேல் நிம்மதி யாகத் தூங்குவார்கள் சரி, இந்தத் தூக்கத்தைக் கெடுத்தது யார்? நீங்கள் தான் தூக்கத்தை கெடுத்தவர்கள். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மக்கள் மகிழ்ச்சியோடு இருப் பார்கள் என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரி யும். ஆனால் இந்தத் துயரத்தைக் கொடுத்தது யார்? நீங்கள் கொடுத்தீர்கள். அதனால் தான் மக்கள் விடாப்பிடியான போராட்டத்தை நடத்தி இன்றைக்கு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வைத்திருக் கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு குடியரசுத் தலைவர் உரையிலே என்ன சொல்கிறீர்கள்? அரியவகைக் கனி மங்களை எல்லாம் தனியார் கைகளுக்கு தாரை வார்க்கப்படும் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஒரு இரையைப் பறித்துவிட்டு, பெரும் விருந்தே நாங்கள் கொடுக்கிறோம் என்று தனியார் நிறுவனங்களுக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள். ஒரு அரிட்டாபட்டியை நாங்கள் காப்பாற்றி விட்டோம். அதற்குப் பதிலாக இந்தியாவில் பல அரிட்டாபட்டிகளை உருவாக்குவோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். 

தமிழகத்தில் 5,300 ஆண்டுக்கு முன்பே இரும்பு தொழில்நுட்பம்

 அதேபோல இந்த அவையிலே மிகப் பெருமைக்குரிய விஷயம், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மிகக் கம்பீரமாகச் சொன்னதைப் போன்று இந்தியாவின் வரலாற்றில் வசீகரமான ஒன்று இரும்புத் தொழில்நுட்பம், தில்லி யில் உள்ள குதூப் மினார் இரும்புத் தூண், துருப்பிடிக்காத இரும்புத் தூண். கோனார்க் கோயிலில் இருக்கும் இரும்பு மாடம், தார் இரும்புத் தூண். இவையெல்லாம் உலக வரலாற்றில் இந்தியாவின் மீதான வசீகரத்திற்குக் காரணம். இந்த வசீகரத்தினுடைய பெரு மைகளில் மணிமுத்தான ஒரு பெருமை இப்பொழுது உருவாகி இருக்கிறது.  “5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்புத் தொழில்நுட்பம் இருந்தது” என்பது உலக வரலாற்றின் ஒரு மிக முக்கியமான செய்தி. இந்த உண்மை, தமிழக முதல்வரால், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. விந்திய மலைக்கு வடக்கே செம்பு மட்டும் தான் பயன்பாட்டில் இருந்தது என சொல்லப்பட்ட காலத்தில் விந்திய மலைக்கு தெற்கே குறிப்பாகத் தமிழ்நாட் டில் இரும்புப் பயன்பாடு வந்து விட்டது. இயற்கையைப் பகுத்த றிவு கொண்டு அணுகி தங்கள் வாழ்க்கையையும், வளத்தையும் உருவாக்கிய ஒரு அறிவுச் சமூக மாக தமிழ்நாட்டின் அறிவு மரபு இருந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது

இரும்புத் தொழில்  நுட்ப ஆவணப்படம்

இந்த நிலையில், அவைத் தலைவரை நான் கேட்டுக் கொள்கி றேன்: வருகின்ற 15-ஆம் தேதி  நாடாளுமன்ற உறுப்பினர்களு க்கு, இந்த நாடாளுமன்ற வளா கத்தில் ராமாயணத்தின் அனிமே சன் படம் திரையிடப்படும் என்று மக்களவைச் செயலகம் சொல்லி இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைப் பற்றி தமிழ் நாடு அரசு வெளியிட்டிருக்கும் ஆவணப்படத்தை இந்த அவை யில் நீங்கள் திரையிட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  குறுநில மன்னர் கனவு அதேபோல் இன்று மாநில உரிமையைத் தொடர்ந்து கேள் விக்குறி ஆக்குபவர்களாக ஆளு நர்கள் இருக்கின்றனர். குறுநில மன்னர்களாகவே தங்களை அவர் கள் நினைத்துக் கொள்கிறார்கள். நீதிமன்றங்கள் எத்தனையோ முறை தலையில் கொட்டினாலும் அவர்கள் மாறுவதாக இல்லை. அரசர்களின் ஆடையை அணிந்து கொள்வதால் மட்டுமே ஒருவர் அர சராகி விட முடியாது. அவர் நாடகக் கலைஞராக மட்டும் தான் ஆக முடியும். இந்த உண்மையை அவ ருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. 

அறியாமையில் வெளிநடப்பு செய்யும் ஆளுநர்

சட்டமன்றத்தில் இருந்து அதிகமாக வெளிநடப்பு செய்கிற வர்களாக ஆளுநர்கள் இருக்கி றார்கள். சட்டமன்றத்தில் தேர்ந்தெ டுக்கப்பட்டவர் வெளியே போனால் தான், வெளிநடப்பு. இந்த அவை யில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங் கள் வெளியேறினால் தான் அது வெளிநடப்பு. இந்த அவைக்கு வருகிறவர்கள் எல்லாம் வெளி யேறினால் அதற்குப் பெயர் வெளி நடப்பு அல்ல. தனக்கு இல்லாத அதிகாரத்தை இருக்கிறதாக நினைக்கிற (ஆளுநரின்) அறியா மையை எப்படிப் போக்குவது என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை. இந்த அவையில் இதை நான் மீண்டும் இங்கே குறிப்பிட வேண்டுமென்று நினைக்கின்றேன்.  குடியரசுத் தலைவர் செம்மொ ழியைப் பற்றியும் தமது உரையில் எடுத்துரைத்தார். நான் இங்கே மிகப் பணிவோடு தெரிவித்துக் கொள்ள வேண்டிய விசயம், அர சியல் சாசன விவாதத்தின் மிக முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே மேற்கோள் காட்ட வேண்டுமென நினைக்கின்றேன். 

இந்தியில் உரையாற்றுவது அம்பேத்கரை அவமதிப்பது

குடியரசுத் தலைவர் பதவியை என்ன சொல் கொண்டு அழைக்க வேண்டுமென்று அரசியல் சாசன வடிவமைப்பின் போது, மிகப்  பெரிய விவாதம் நடந்தது. குறிப் பாக ராஷ்டிரபதி என்று தான் அழைக்க வேண்டுமென பல  உறுப்பினர்கள் சொன்ன போது,  அண்ணல் அம்பேத்கர் அவர்கள் “நான் அரசியல் சாசனத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறேன் . எனவே பிரசிடண்ட் ஆப் இந்தி யா என்று தான் எழுதுவேன். ராஷ்டிரபதி என்று எழுத மாட்டேன் ” என்று கூறினார். நான் ஆங்கிலத்தில் எழுதுகிறேன், நீங்கள் உங்கள் தாய்மொழி யிலே மொழி பெயர்த்துக் கொள் ளுங்கள் என்றார். ஆனால் இன்றைக்கு அரசியல் சாசனத்தி னுடைய 75 ஆவது ஆண்டை முன் னிட்டு நடைபெற்ற நாடாளுமன் றத்தின் இரு அவைகளும் இணைத்து நடத்தப்பட்ட கூட்டுக் கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில், அரசியலமைப்பின் முகப்புரையைப் படிக்கும்போது, ஆங்கிலத்தில் தான் படிக்கப் போகிறார் என்று நாங்கள் எல்லாம் காத்திருந்தோம்.  ஆனால் குடியரசுத் தலை வர் இந்தியிலே இந்த நாட்டினு டைய அரசியல் சாசன முகப்புரை யை வாசித்தார். இந்தி தெரியாத பெரும்பான்மையான நாடாளு மன்ற உறுப்பினர்கள், அப்படியே திகைத்துப் போய் நின்றோம். இது இந்தியாவினுடைய ஜன நாயகத்திற்கு விடுக்கப்பட்டி ருக்கிற சவால். ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் இந்த அரங் கத்தை நீங்கள் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மையான இந்திய மொழிகளினுடைய பிரதிநிதிகள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் தமது உரையில் குறிப்பிட்டார்.