ராஜஸ்தான் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு
ராஜஸ்தானில் 27 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட தொழிற்சாலை 4,200 தொழிலாளர்களுக்காண இழப்பீட்டை தற்போது வரை வழங்கவில்லை. இந்நிலையில் நிலுவையில் உள்ள 500 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊதியத்தை வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 196 நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் ஆதரித்துப் பேசினார்.