states

img

பாஜக கூட்டணி ஆளும் பீகாரில் அட்டூழியம்; தலித் மக்களின் குடிசைகள் தீ வைத்து அழிப்பு

பாட்னா பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரின் முபாசில் பகுதியில் தலித் மக்களின் குடிசைகளை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தி யுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

பாஜகவின் வகுப்புவாத அரசி யல் காரணமாக மணிப்பூர் மாநி லத்தை போன்று, தற்பொழுது நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் தீவிரமடைந்து வரு கின்றன. குறிப்பாக பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்க ளில் முஸ்லிம் மற்றும் தலித், பழங்குடி இன மக்கள் மீது தொ டர்ச்சியாக தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. 

இந்நிலையில் பீகாரின் நவாடா மாவட்டம் முபாசில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தோலா பகுதியில் புத னன்று இரவு தலித் மக்கள் வாழும் குடிசைகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இந்த தீ வைப்புச் சம்பவத்தில் 21 குடிசைகள் முற்றி லும் எரிந்து நாசமாகிய நிலையில், சில குடிசை வீடுகள் 50% அள வில் எரிந்து சரிந்து விழுந்தன. குடிசைகளுக்கு தீ வைக்கப் பட்டதை முன் கூட்டியே கவனித்த தால், உயிர் சேதம் தவிர்க்கப் பட்டது. நிலத்தகராறு காரணமா கவே இந்த சம்பவம் அரங்கேறி யதாகவும், இதுதொடர்பாக  15 பேர் கைது செய்யப்பட்டதாகவும் நவாடா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபினவ் திமான் கூறியுள்ளார்.

ஒன்றிய அமைச்சர் அதிகாரத்தை பயன்படுத்தி தாக்குதலா?

நவாடா மாவட்டத்தில் ரவி தாஸ், மஞ்சி, பஸ்வான் ஆகிய 3 பிரிவு தலித்துகள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். நிலத்தக ராறு காரணமாக நவாடா மாவட் டத்தில் ரவிதாஸ் - மஞ்சி ஒரு பிரி வாகவும், பஸ்வான் தனி பிரிவாக வும் உள்ளனர். இதில் பஸ்வான்  பிரிவினர் ஓரளவு பெரும்பான்மை யாக வாழும் நிலையில், சில நாட்க ளுக்கு முன் இந்த இரண்டு பிரிவுக ளுக்கு இடையே மோதல் ஏற் பட்டது. 

இந்த மோதலின் வெளிப்பாடா கவே தோலா பகுதியில் உள்ள ரவிதாஸ் - மஞ்சி தலித் பிரிவின் குடிசை வீடுகளை பஸ்வான் பிரி வினர் கொளுத்தியுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தோலா பகுதியில் ரவிதாஸ் - மஞ்சி பிரிவினருக்கு 80 குடிசை கள் உள்ள நிலையில், 21 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்தும், பல குடிசைகள் தீயால் சரிந்து விழுந் துள்ளதால் பஸ்வான் பிரிவினர் மீது ரவிதாஸ் - மஞ்சி பிரிவினர் கடும் ஆத்திரத்தில் உள்ளதாகவும், அவர்கள் மீது எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் நவாடா மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

மேலும் ஒன்றிய அமைச்சரும், லோக் ஜனசக்தி தலைவருமான சிராக் பஸ்வானின் பெயரை பயன் படுத்தி ரவிதாஸ் - மஞ்சி தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட் டுள்ளதாக தகவல் ஒன்றும் வெளி யாகியுள்ளது. பீகாரில் முக்கிய தலித் தலைவர்களில் ஒருவரான சிராக் பஸ்வான், ரவிதாஸ் - மஞ்சி பிரிவினர் மீது தாக்குதல் நடத்திய  பஸ்வான் பிரிவைச் சேர்ந்தவர்.