states

img

‘அஃப்ரீன் பாத்திமாவுடன் நிற்கிறோம்’

லக்னோ, ஜுன் 13 - இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலி யுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதி களில் போராட்டங்கள் நடந்தன. இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ், சஹாரன்பூர், பிஜ்னோர், மொராதாபாத், ராம்பூர், லக்னோ ஆகிய 6 மாவட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர் பாக 130-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். பல இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப் பினரும் காவல்துறையினரும் வன்முறையைத் தூண்டினர். குறிப்பாக, பிரயாக்ராஜ் பகுதியில் ஏற்பட்ட வன்முறையை முன்னின்று நடத்தியதாக ‘வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா’  (welfare party of india) அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஜாவீத்  முகமது கைது செய்யப்பட்டிருக் கிறார்.

இதன் தொடர்ச்சியாக, ஜாவீத் முகமது வீட்டில் சோதனை மேற் கொண்ட போலீசார், வீட்டில் சட்டத் திற்கு புறம்பான வகையில் ஆயுதங் களை பதுக்கி வைத்திருந்ததாகவும், ஆட்சேபனைக்குரிய கருத்துகள் அடங்கிய போஸ்டர்களும் கைப்பற்றப் பட்டதாக தெரிவித்தனர். அத்துடன், கடந்த சனிக்கிழமை இரவு ஜாவீத் முகமதுவின் மகளும், சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய முகமாக அறியப்பட்ட வருமான அஃப்ரீன் பாத்திமாவுக்கு, ‘விதிமுறைகள் மீறி உங்களது வீடு கட்டப்பட்டுள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை உங்களது வீடு இடிக்கப்படும்” என்று உத்தரப்பிர தேச அரசு நோட்டீசும் அனுப்பப்பட் டது. இதனைத் தொடர்ந்து அஃப்ரீன்  பாத்திமாவின் வீடு ஞாயிற்றுக்கிழ மை புல்டோசரால் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பழி வாங்கும் நடவடிக்கையாகவே அஃப்ரீன் பாத்திமாவின் வீட்டை  உத்தரப்பிரதேச அரசு இடித்துள்ள தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும்  #StandWithAfreenFatima என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பின ரும் அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஆதர வாக குரல் கொடுத்தனர். அதே வேளையில், அவருக்கு எதிரான கருத்துகளும் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. இதற்கிடையில், அஃப்ரீன் பாத்திமாதான் கலவரங்கள் ஏற்பட அவரது தந்தைக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார் என்று உத்தரப் பிரதேச போலீசார் முத்திரை குத்தி யுள்ளனர். ஆனால், அதற்கான எந்த  ஆதாரத்தையும் போலீசார் வெளியிடவில்லை. வலுவான ஆதாரங்கள் கிடைப்பின் அஃப்ரீன் பாத்திமா மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜேஎன்யூ மாணவரான அஃப்ரீன் பாத்திமா அங்கு மாணவ அமைப்பின் கவுன்சிலராக இருந்து ள்ளார். மேலும், அலிகார் பல்கலைக்கழகத்தில் மாணவப் பிரிவு தலைவராக இருந்திருக்கிறார். கடந்த சில வருடங் களாக இந்தியாவில் இஸ்லாமி யர்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதெல்லாம் அஃப்ரீன் பாத்திமா தனது எதிர்ப்புக் குரலை பதிவு செய்து வருகிறார். சிஏஏ-வில் தொடங்கி ஹிஜாப் வரை அவரது எதிர்ப்புக் குரல் தொடர்கிறது.

 அஃப்ரீன் பாத்திமாவும், அவரது சகோதரியான சுமையாவும் இணைந்து அலகாபாத் இஸ்லாமிய  பெண்களுக்காக பெண்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பில் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தந்தையின் கைது குறித்து அஃப்ரீன் பாத்திமா கூறும்போது, “அலகாபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எனது தந்தை ஜாவீத் முகமது, தாய் பர்வீன் பாத்திமா மற்றும் சகோதரி சுமையா பாத்திமா ஆகியோரின் பாதுகாப்பு குறித்து கவலையுடன் இருக்கிறேன். எந்த அறிவிப்பும் இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடைசிவரை அவர்கள் எங்கிருக் கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கோட்வாலி காவல் நிலையம் சென்றபோது, எனது குடும்பத்தினர் அங்கு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தவும் காவல் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்” என்றார். சிஏஏ எதிர்ப்பு, ஹிஜாப் சர்ச்சை என தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு  செய்து வந்த அஃப்ரீன் பாத்திமா தற்போது உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசின் புல்டோசர் நட வடிக்கைகளின் காரணமாக ஓர் எதிர்ப்பு முகமாக மாறியிருக்கிறார் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.